Published : 05 May 2015 08:53 AM
Last Updated : 05 May 2015 08:53 AM
ஆம் ஆத்மியை தீர்த்துக் கட்ட ஊடகங்கள் ஒப்பந்தம் பெற் றுள்ளன என்று கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் அண்மையில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய போராட் டத்தின் போது விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரின் பட்டச் சான்றிதழ் போலியானது என நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரங்களால் ஆம் ஆத்மி கட்சி கடந்த சில வாரங் களாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் இணைய தளம் ஒன்றின் தொடக்க விழாவில் கேஜ்ரிவால் இது தொடர்பாக மேலும் பேசும்போது, “ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கின்றன. இதை வெளிப்படுத்துவதற்கு பொது விசாரணை அவசியம். ஆம் ஆத்மி கட்சி மீதான நன் மதிப்பை சீர்குலைக்க எல்லா வற்றையும் முயற்சித்துப் பார்ப் பதே ஊடகங்களில் பெரும்பாலா னோரின் பணியாக உள்ளது.
தேர்தலுக்கு முன்பு, டி.வி. சேனல்களை எங்களை அழிக்க அனைத்து முயற்சிகளும் செய்தன. ஆனால் மக்களை முட்டாளாக்க முடியாது” என்றார்.
தோமரை பதவி நீக்க வலியுறுத்தி கேஜ்ரிவால் வீட்டின் முன் எதிர்க்கட்சிகள் கடும் போராட்டம் நடத்தின. இந்நிலையில் தோமர் அளித்த விளக்கத்தால் திருப்தி அடைந்த தாக கூறிய கேஜ்ரிவால், ஊடகங்கள் தன்னை துரத்துவதாக குற்றம் சாட்டினார்.
“உண்மை என்னவென்று அறிவது ஊடகங்களின் நோக்க மல்ல. தோமரை வெளியேற்று வதே அவர்களின் நோக்கம். தோமருக்கு நான் உறவினரோ, நண்பரோ அல்ல. பட்டச் சான்றிதழ் சர்ச்சை தொடர்பாக அவரிடம் நான் விளக்கம் கேட்டேன். அதற்கு திருப்தி அளிக்கும் பதிலை அவர் தந்தார்” என்றார் கேஜ்ரிவால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT