Published : 14 May 2015 12:10 PM
Last Updated : 14 May 2015 12:10 PM
ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா அவரது வீட்டில் சந்தித்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா அவரது வீட்டில் சந்தித்தது தவறானது என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா தனது வீட்டில், குற்றம் சாட்டப்பட்டவர்களை சந்தித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை பலமுறை அவரது வீட்டில் சந்தித்ததாக கூறப்பட்டது.
இதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இயக்குனர் இல்லத்தின் வருகைப் பதிவேடும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது, "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா அவரது வீட்டில் சந்தித்தது தவறானது" என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், இந்தப் புகார் தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT