Published : 26 May 2015 08:15 AM
Last Updated : 26 May 2015 08:15 AM
முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உட்பட 17 நபர்கள், நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் இறுதி வாதம் வரும் ஜூலை 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றையை முறை கேடாக ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட தாகக் கூறி, அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, சில நிறுவனங்கள் உட்பட 17 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கின் இறுதிவாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் கடந்த ஏப்ரலில் தொடங்கியது.
நேற்று மீண்டும் இறுதிவாதம் தொடர இருந்தது. அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் முன்கூட்டியே வாதம் நடத்த தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், கோடை விடுமுறைக்குப் பிறகு இறுதி வாதம் மீண்டும் தொடங்கலாம் என கோரிக்கை விடப்பட்டது. கோடை விடுமுறை, கூடுதல் அலைக்கற்றை வழக்கு விசாரணைக்கு வரவிருப்பது ஆகிய வற்றைச் சுட்டிக்காட்டி ஒத்திவைக்க கோரினர். இதையடுத்து ஜூலை 14-ம் தேதிக்கு இறுதி வாதத்தை நீதிபதி ஒத்தி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT