Published : 08 May 2014 09:04 AM
Last Updated : 08 May 2014 09:04 AM
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக் கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதால், எக்காரணம் கொண்டும் வழக்கின் விசாரணையை நிறுத்த முடியாது என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா புதன்கிழமை தெரிவித்தார்.
ஜெயலலிதா,அவரது தோழி சசிகலா,வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி டி'குன்ஹா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
ஜெ. கோரிக்கை நிராகரிப்பு
கடந்த திங்கள்கிழமை ஜெய லலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில், ‘ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவ னங்களின் சொத்துக்கள் இணைக் கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங் களின் சார்பில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மனுக்களின் மீது தீர்ப்பு வழங்கிய பிறகே,மூல வழக்கை(சொத்துக்குவிப்பு வழக்கு) விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டுள்ளார். எனவே பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கும் இறுதி வாதத்தை நிறுத்திவிட்டு, உடனடி யாக அந்த தனியார் நிறுவனங் களின் மனுக்களை விசாரிக்க வேண்டும்''என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடும் ஆட்சேபம் தெரி வித்திருந்தார். ''சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் மனு மீதான தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது. ஏனென்றால் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான அனைத்து மனுக்களையும் விசாரிக்கும் அதி காரம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத் திற்கு மட்டுமே இருப்பதாக உச்சநீதிமன்றம் 2003ம் ஆண்டே தெரிவித்துள்ளது''என்றார்.
இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதி டி'குன் ஹா,''ஜெயலலிதா தரப்பின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரம் சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதால், எக்காரணம் கொண்டும் வழக்கின் விசார ணையை நிறுத்த முடியாது. எனவே அவர்களது கோரிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறேன். சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை நடைபெறும் வேளை யில்,தனியார் நிறுவனங்களின் மனுக்கள் மீதான விசாரணையும் தொடர்ந்து நடைபெறும். மூல வழக்கில்(சொத்துக்குவிப்பு வழக்கு) தீர்ப்பை வெளியிடுவ தற்கு முன்பே, கிளை வழக்கின் (தனியார் நிறுவனங்களின் வழக்கு) தீர்ப்பை வெளியிடுவேன்'' என்றார்.
அதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதிவாதத்தை 14-வது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்தார். அரசு தரப்பின் 259-வது சாட்சி யான சொத்துக்குவிப்பு வழக் கின் விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு(தமிழக லஞ்ச ஒழிப்பு துறை) அளித்த, சுமார் 50 பக்கங்கள் அடங்கிய வாக்கு மூலத்தை வாசித்தார்.
19-ம் தேதி முதல் ஜெ. வாதம்
259 அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்த நீதிபதி டி'குன்ஹா பேசுகையில்,''சொத்துக்குவிப்பு வழக்கில் வருகின்ற 9 மற்றும் 15 தேதிகளில் அரசு வழக்கறிஞர் இறுதியுரை நிகழ்த்தலாம்.மேலும் இவ்வழக்கு தொடர்பான சில முக்கிய விவரங்களை வருகின்ற 15-ம் தேதி அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்ய வேண்டும்.
அன்றைய தினமே சொத்துக் குவிப்பு வழக்கின் 3-ம் தரப்பான திமுக பொதுசெயலாளர் அன்பழ கனின் வழக்கறிஞர் தங்களுடைய தரப்பின் வாதத்தை எழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். 19-ம் தேதி முதல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தங்களுடைய இறுதிவாதத்தை தொடங்க வேண்டும்''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT