Published : 31 May 2015 10:50 AM
Last Updated : 31 May 2015 10:50 AM
உத்தராகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் நேற்று குண்டு வெடித் ததில் இந்திய ராணுவத்தின் கூர்கா படையைச் சேர்ந்த 3 வீரர்கள் காய மடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில் கூறும்போது, “காய் கறி வாங்குவதற்காக ராணுவ வாகனத்தில் 3 வீரர்கள் உட்பட 4 பேர் சந்தைக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் காயமடைந்த 3 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.
மிகவும் பாதுகாப்பு மிக்க கன்டோன்மென்ட் பகுதியில்தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில்தான் முதல்வரின் இல்லம், ஆளுநர் மாளிகை ஆகியவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT