Published : 24 May 2015 09:58 AM
Last Updated : 24 May 2015 09:58 AM

முலாயம் சிங்கை சந்தித்தார் நிதிஷ்குமார்

டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனதா கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை புறக் கணித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை சந்தித்து பேசினார்.

ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்ட மாஞ்சிக்கு லாலு அழைப்பு விடுத்ததால் நிதிஷ்குமார் புறக்கணித்தார்.

இந்நிலையில் முலாயம் சிங்கை நேற்று சந்தித்து நிதிஷ்குமார், பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மாஞ்சியால் எந்தப் பலனும் ஏற் படாது என கூறியதாக தெரிகிறது. அவருடன் ஐக்கிய ஜனதா தலைவர் சரத்யாதவும் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x