Last Updated : 19 May, 2015 06:47 PM

 

Published : 19 May 2015 06:47 PM
Last Updated : 19 May 2015 06:47 PM

மேகாலயா ஆளுநராக பதவியேற்கிறார் சண்முகநாதன்

மேகாலயா மாநிலத்தின் புதிய ஆளுநராக, பாஜக மூத்த தலைவரும் தமிழருமான வி.சண்முகநாதன் புதன்கிழமை பதவியேற்பார் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சண்முகநாதனுக்கு மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உமா நாத் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு மேகாலயா ஆளுநராக இருந்த கே.கே. பால் கடந்த ஜனவரி மாதம் உத்தராகண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, மேற்குவங்க மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதியிடம் மேகாலயா ஆளுநர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 12-ம் தேதி சண்முகநாதன் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அரசியல் அறிவியலில் முதுநிலை பட்டமும் எம்.பில். பட்டமும் படித்துள்ள சண்முகநாதன், கடந்த 1962-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தார். பின்னர் பாஜகவில் சேர்ந்த அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பிரபல எழுத்தாளரான இவர், கலாச்சாரம் மற்றும் சமூகம் தொடர்பாக 3 நூல்களை தமிழில் எழுதி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x