Last Updated : 29 Apr, 2015 12:29 PM

 

Published : 29 Apr 2015 12:29 PM
Last Updated : 29 Apr 2015 12:29 PM

நேபாளத்தில் மலையேற்ற வீரர்கள் 19 பேர் மீட்பு: விமானப் படை

இமயமலைப் பகுதியில் மலையேறும் வீரர்கள் 19 பேரை விமானப் படை மீட்டதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

கடந்த 25-ம் தேதி காலை இமாலய மலைப்பகுதியில் இருக்கும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இமயமலைப் பகுதியில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் வீரர்கள் பலரும் சிக்கி தவிக்கின்றனர்.

அவர்களை மீட்கும் பணியில் பல சிக்கல் நிலவுகிறது. இந்த நிலையில் இமயமலைப் பகுதியில் மலையேறும் வீரர்கள் 19 பேரை இந்திய விமானப் படை மீட்டதாக பாதுகாப்பு அமைச்சக முதன்மை செய்தித் தொடர்பாளர் சிதான்சு கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x