Published : 25 Apr 2015 09:16 AM
Last Updated : 25 Apr 2015 09:16 AM

டி.ஆர்.எஸ். கட்சித் தலைவராக 8-வது முறையாக சந்திரசேகர ராவ் தேர்வு

தெலங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள டி.ஆர்.எஸ். கட்சியின் 3 நாள் மாநாடு ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது.

மிகவும்பிரம்மாண்ட ஏற்பாடுக ளுடன் தொடங்கிய இந்த மாநாட்டை,கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், கட்சிக் கொடி யேற்றி, முரசு கொட்டிதொடங்கி வைத்தார். இதில் மாநிலப் பிரிவினை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், தெலங்கானாவை ‘தங்க தெலங்கானா’வாக உருவாக்க வேண்டும் என்பது உட்பட 12 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில், 8-வது முறையாக கட்சித் தலைவராக சந்திரசேகர ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநாட்டுக்காக தெலங்கானா சிறப்பு சமையல் வகை வகையாக தயாரிக்கப்பட்டு, தொண்டர்களுக்கு பரிமாறப்பட்டன. ஹைதராபாத் நகரம் முழுவதும் கட்சிக் கொடிகள், பேனர்கள், கட்-அவுட்கள் என விழாக்கோலம் பூண்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x