Last Updated : 20 Apr, 2015 12:18 PM

 

Published : 20 Apr 2015 12:18 PM
Last Updated : 20 Apr 2015 12:18 PM

சோனியா மீதான விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் கிரிராஜ்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (திங்கள்கிழமை) வருத்தம் தெரிவித்தார்.

மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணை யமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ராஜீவ் காந்தி நைஜீரியப் பெண்ணை திருமணம் செய்திருந்து, அப்பெண் வெள்ளை நிறத்தவராக இல்லாமலிருந்தால் காங்கிரஸ் அவரது தலைமையை ஏற்றிருக்குமா" எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

ஏற்கெனவே, இது ஊடகங்களில் வெளியாகி நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் இன்று தொடங்கிய நிலையில், மக்களவை கூடியதும் இவ்விவகாரம் எதிரொலித்தது. கிரிராஜ் சிங் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர். காங்கிரஸ் கட்சியினர் அமளியால் அவை 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அவை மீண்டும் கூடியபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து தான் கூறிய கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வருத்தம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x