Published : 30 Apr 2015 09:30 AM
Last Updated : 30 Apr 2015 09:30 AM
பாஜக தலைமையிலான கூட் டணியை வீழ்த்துவதற்காக, ஜனதா பரிவார் கட்சிகள் மீண்டும் இணைந்தது போல காங்கிரஸில் இருந்து பிரிந்த கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முன்னணியை உருவாக்க தயாராக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் நேற்று தெரிவித்தார்.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேசியவாத காங்கிரஸ், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டி யிட்டது. இந்நிலையில் அக்கட்சி யின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நேற்று நடை பெற்றது. இந்தக் கூட்டத் துக்குப் பிறகு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சரத் பவார் அளித்த பதில் வருமாறு:
ஜனதா கட்சியிலிருந்து பிரிந்த கட்சிகள் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளன. இதன்மூலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து தேசிய அரசியலிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
இதுபோல காங்கிரஸிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் பிரிந்து சென்ற கட்சிகளை மீண்டும் ஒன்றாக இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுமா என்று கேட்கிறீர்கள்.
பாஜக-சிவசேனா கூட்டணியை வீழ்த்துவதற்காக, காங்கிரஸில் இருந்து பிரிந்த கட்சிகள் மீண்டும் ஒன்றாக இணைய விரும்பினால் அதுகுறித்து சிந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதேநேரம் எங்களது கட்சியின் அடையாளத்தை இழக்க முடியாது.
நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றி விட்டது. ஆனால் மாநிலங்களவை யில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவது சிரமம். இந்த மசோதாவை எதிர்த்து நாங்கள் வாக்களிப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT