Published : 18 Apr 2015 01:51 PM
Last Updated : 18 Apr 2015 01:51 PM
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டார்.
காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டம் நர்பல் பகுதியில், போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதலின்போது சிறுவன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் மீண்டும் கைது செய்யப்பட்டதையடுத்து ஸ்ரீநகரில் கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது சோஃபி (17) என்ற சிறுவன் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT