Last Updated : 09 Apr, 2015 04:46 PM

 

Published : 09 Apr 2015 04:46 PM
Last Updated : 09 Apr 2015 04:46 PM

லிப்டில் சிக்கிய ராஜ்நாத் சிங்: உடனிருந்த மூவரை மீட்டார்

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விழா ஒன்றுக்கு கலந்துகொள்ள சென்றபோது லிப்டில் சிக்கிக் கொண்டார். உடன் சிக்கிக் கொண்ட மற்றவர்களை காப்பாற்றியப் பின்னரே அவர் வெளியேறினார்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் 'வீர தினம்' இன்று (வியாழன்) கடைப்பிடிக்கப்படுகிறது. விழாவில் கலந்துகொள்வதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சி.ஆர்.பி.எஃப். மாளிகைக்குச் சென்றிருந்தார். அவருடன் உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் சவுத்ரி, சி.ஆர்.பி.எஃப். தலைவர் பிரகாஷ் மிஸ்ரா மற்றும் ராஜ்நாத்தின் பாதுகாவலர் பி.கே.சிங் ஆகியோர் இருந்தனர். விழா மேடைக்கு சென்றபோது லிப்ட் பழுதானதால் அவர்கள் அனைவரும் உள்ளே சிக்கினர்.

இது குறித்து இணையமைச்சர் ஹரிபாய் சவுத்ரி கூறும்போது, "நாங்கள் அனைவரும் அரங்குக்குச் செல்ல லிப்ட்டில் ஏறினோம். திடீரென்று அந்த லிப்ட் பழுதாகின் நின்றது. இதனால் அனைவரும் லிப்ட்டுக்குள்ளே மாட்டிக்கொண்டோம்.

லிப்ட்டில் நாற்காலி இருந்தது. அதனை பயன்படுத்தி ராஜ்நாத் சிங்கின் பாதுகாவலர்கள் வெளியேயேறினர். பின்னர் இணையமைச்சரும், சி.ஆர்.பி.எஃப். தலைவரும் வெளியே வந்தனர். அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றிய பின்னரே ராஜ்நாத் சிங் வெளியேறினார்.

எப்போதுமே மற்றவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு நாம் செயல்பட வேண்டும். அதையும் நாம் பயபக்தியுடன் செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் இதனை குறிப்பிடுகிறேன்" என்று விழா நிகழ்ச்சியில் சவுத்ரி கூறினார்.

பின்னர் இது குறித்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "லிப்டில் சிக்கியவர்களில் மிகவும் எடை கூடுதலாக இருந்தவர் சவுத்ரி தான். அவர் வெளியேறதான் நேரமானது" என்று நகைச்சுவை உணர்வோடு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x