Last Updated : 29 Apr, 2015 08:11 AM

 

Published : 29 Apr 2015 08:11 AM
Last Updated : 29 Apr 2015 08:11 AM

நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு 4 அமைச்சர்களை அனுப்பினார் பிரதமர்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு செல்லுமாறு 4 மத்திய அமைச்சர்களை பணித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்திய - நேபாள எல்லைப் பகுதிக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், ராதா மோகன்சிங், ஜே.பி.நட்டா ஆகியோர் நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்றும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள பிஹாருக்கு செல்வார்கள்.

பிஹாரில் சேதங்களை மதிப்பிடும் இவர்கள், மாநில முதல்வர் நிதீஷ் குமாரை சந்தித்து பேசுவர். பின்னர் பிரதமரிடம் அறிக்கை அளிப்பார்கள்.

இந்த தகவலை பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கட்சியின் மூத்த தலைவர் எல்.கே அத்வானி உள்ளிட் டோர் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடியால் இக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறும்போது, “தர்மேந்திர பிரதான் பிஹாரில் நேபாள எல்லைப் பகுதியில் இருந்துகொண்டு, நேபாளத்தில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். மற்ற 3 அமைச்சர்களும் புதன்கிழமை (இன்று) பிஹார் செல்வார்கள்.

நேபாளத்தில் நிலநடுக்க நிவாரணப் பணிகளுக்காக பாஜகவின் அனைத்து எம்.பி.க்களும் தங்கள் ஒருமாத ஊதியத்தை அளித்துள்ளனர்” என்றார். நேபாளம் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கத்தால் இறந்தவர்களுக்கு பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் விரை வாக செயல்பட்ட மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

எம்.பி.க்கள் கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசும் போது, “சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதா குறித்து அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசிக்கப் பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் மக்களவையிலும் பின்னர் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப் படும். நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செய்யும் பிரசாரம் மழுங்கிவிட்டது. ஏழைகள் மற்றும் அடித் தட்டு மக்களின் நலனை மத்திய அரசு பாதுகாக்கும். நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை மத்திய அரசு அனுமதிக்காது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x