Last Updated : 27 Apr, 2015 07:02 PM

 

Published : 27 Apr 2015 07:02 PM
Last Updated : 27 Apr 2015 07:02 PM

வட-கிழக்கு இந்தியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 பதிவு

மேற்கு வங்கத்தை மையமாகக் கொண்ட புதிய நிலநடுக்கம் திங்களன்று வட-கிழக்கு இந்தியாவில் உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் இது 5.1 என்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான யு.எஸ்.ஜி.எஸ். தெரிவித்துள்ளது.

டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள மிரிக் என்ற பகுதிக்கு 5 கிமீ தென் - மேற்கே இதன் மையம் இருந்தது.

நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் ஏற்படும் பின்னதிர்வாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பாட்னாவில் இருந்து ராய்ட்டர்ஸ் நிருபர் கூறுவதாவது: "சற்றுமுன் நிலநடுக்கம் ஏற்பட்டது, அனைத்தும் குலுங்கின, மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x