Published : 04 Apr 2015 09:01 AM
Last Updated : 04 Apr 2015 09:01 AM
சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சுமார் 11 மணி நேரம் வரை சாத்தப்பட உள்ளது.
இன்று சந்திர கிரகணம் மதியம் 3.45 மணி முதல் தொடங்கி இரவு 7.15 வரை நிகழ்கிறது. இதனை யொட்டி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்களும் மூடப் படுகின்றன. திருப்பதி ஏழுமலை யான் கோயில், 6 மணி நேரம் முன்னதாகவே, அதாவது காலை 9 மணி முதலே மூடப்படுகிறது. பின்னர் இரவு 8.30 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, நடை சுத்தம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதே போன்று சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜ சுவாமி கோயில் ஆகியவையும் மூடப்பட உள்ளன.
ஆனால், பஞ்ச பூத தலங்களில் வாயு தலமாக விளங்கும் காள ஹஸ்தி சிவன் கோயில் மட்டும், நவக்கிரக கவசம் உள்ளதால், கிரகண கால அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால் இக்கோயில் சூரிய, சந்திர கிரகணங்களின் போது நடை சாத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT