

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கிரீஷ் எனும் மாணவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை இன்டர்நெட் மையத்தின் மூலம் பெற்றார். அப்போது, அந்த ஹால்டிக்கெட்டில் அவரது புகைப்படம் இடம் பெற வேண்டிய இடத்தில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் இருக்கும் புகைப்படம் இருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர், உடனடியாக தனது கல்லூரி நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்தார். அதன்பின் மாநில தொழிற்கல்வி ஆணைய ருக்கு புகார் செய்தனர்.
இதையடுத்து அதே ஹால் டிக்கெட்டில் தெலங்கானா முதல்வரின் புகைப்படத்துக்கு அருகிலேயே மாணவர் கிரீஷின் புகைப்படத்தை ஒட்டி வழங்கப்பட்டது. தற்போது அந்த மாணவர் அந்த ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி தேர்வு எழுதி வருகிறார்.