Published : 23 Apr 2015 12:46 PM
Last Updated : 23 Apr 2015 12:46 PM

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 3,313 விவசாயிகள் தற்கொலை

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 3,313 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பான புள்ளி விவரம்:

கடந்த 2012-ல் கிட்டத்தட்ட 900 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2013-ல் 1100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கடந்த 2014-ல் 1300 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

மாநிலங்கள் வாரியாக பார்க்கும்போது, கடந்த மூன்று ஆண்டுகளிலுமே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகளவில் நிகழ்ந்துள்ளது. கேரளாவில் சொற்ப அளவில் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x