Last Updated : 06 Apr, 2015 09:19 PM

 

Published : 06 Apr 2015 09:19 PM
Last Updated : 06 Apr 2015 09:19 PM

விவசாயிகள் பேரணி: 19-ம் தேதி வருகிறார் ராகுல்

சுமார் இரண்டு மாதங்கள் அரசியல் விடுப்பில் உள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வரும் 19-ம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் விவசாயிகள் பேரணியில் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கூறும்போது, “டெல்லியில் நடைபெறவுள்ள விவசாயிகள் பேரணியில் நாடுமுழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிற தலைவர்கள் உரையாற்றுவர். ராகுல் காந்தியும் இதில் பங்கேற்று உரையாற்றுவார்” என்றார்.

கடந்த பிப்ரவரி 23-ம் தேதியிலிருந்து ராகுல் காந்தி, அரசியலிலிருந்து தற்காலிகமாக விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x