Published : 22 Apr 2015 09:54 AM
Last Updated : 22 Apr 2015 09:54 AM

குடும்பத்தகராறில் விபரீதம்: குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள தம்புரெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (33). இவரது மனைவி தேவி (25), குழந்தைகள் ஜீவிதா (3), மஞ்சித்குமார் (4).

பூ வியாபாரியான சுரேஷ், கும் மிடிப்பூண்டி பகுதியில் விவசாயி களிடம் பூக்களைக் கொள்முதல் செய்து, சென்னை, கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்து வருகிறார்.

சுரேஷின் மது பழக்கம் காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அவ்வாறே கடந்த 19-ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

மறுநாள் காலை சுரேஷ் வழக்கம் போல வியாபாரத்துக்கு புறப் பட்டுச் சென்றுவிட்ட நிலையில், தேவி, தனது இரு குழந்தைகளுக் கும் விஷத்தைக் கொடுத்துவிட்டு தானும் அருந்தினார். மயங் கிய நிலையில் கிடந்த 3 பேரை யும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்த னர். அங்கு தேவியும், ஜீவி தாவும் நேற்று உயிரிழந்தனர். மஞ்சித்குமார் தொடர் சிகிச்சையில் உள்ளார். கும்மிடிப்பூண்டி போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.

பெண் தூக்கிட்டு பலி

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவரின் மகள் சசிரேகா (24). இவருக்கும், சுங்குவார் சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ஜெகன்ராஜூக்கும் (29), கடந்த மார்ச் 2-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

சசிரேகாவை அவரது கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சசிரேகா வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸார் உடலை மீட்டு பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர். காஞ்சிபுரம் கோட்டாட்சியர் சிவருத்ரய்யா இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x