Published : 24 Apr 2015 09:26 AM
Last Updated : 24 Apr 2015 09:26 AM

2 நாள் மழை நீடிக்கும்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று தெரி வித்ததாவது: வெப்பச் சலனம் காரணமாக வடகிழக்கு திசையில் வீசிக் கொண்டிருந்த காற்று தற்போது தென் மேற்கு திசையில் வீச தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வந்தது. ஆனால், நேற்று தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தலா 2 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. லட்சத் தீவு அருகே உருவான காற்று மேல் அடுக்கு சுழற்சி வலுவிழந்துவிட்டது. எனினும் தென் மேற்கு திசையில் காற்று வீசத் தொடங்கியுள்ளதால், மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x