Published : 24 Apr 2015 09:43 AM
Last Updated : 24 Apr 2015 09:43 AM

அம்பேத்கர் சிலைக்கு பாலாபிஷேகம்: ரோஜாவை எதிர்த்து தலித் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சித்தூர் மாவட்டம் நகரியில் நேற்று அந்த தொகுதியின் எம்.எல்.ஏ வான நடிகை ரோஜா அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை கண்டித்து தலித் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

நகரி எம்.எல்.ஏ.வான‌ நடிகை ரோஜா, அங்கே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால் கோபமடைந்த சில தலித் அமைப்பினர், தலித்துகளை அவமானப்படுத்திய ரோஜா, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தலித் அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இதில் போலீஸார் தலையிட்டு தலித் அமைப்பினரை சமாதானப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, ரோஜா அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதன் பின்னர் அங்கு வந்த தலித் அமைப்பினர், ரோஜா அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்ததால் அந்தச் சிலைக்குக் களங்கம் ஏற்பட்டு விட்டதாக கூறி, அவர் அணிவித்த மாலையை கழற்றிவிட்டு, அம்பேத்கர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வேறு மாலையை அணிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x