Last Updated : 28 Apr, 2015 08:58 AM

 

Published : 28 Apr 2015 08:58 AM
Last Updated : 28 Apr 2015 08:58 AM

நிலநடுக்க நிவாரணப் பணிகளில் உதவி: மாநிலங்களுக்கு பிரதமர் நன்றி

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நேபாளத் துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்ப தாவது:

பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய அனைவரின் உணர்வுகளை பாராட்டு கிறேன். உண்மையான பாராட்டு நமது கலாச்சாரத்துக்கு கிடைக்கவேண்டும். நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்க விரும்பி னால் 125 கோடி இந்திய மக்களுக்கு தெரி விக்க வேண்டும். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பாக கருதி அனைத்து உதவிகளும் செய்ய இந்திய மக்கள் முன்வந்துள்ளனர்.

நிலநடுக்க பாதிப்புகளில் இருந்து துணிச்சலுடனும் விரைவாகவும் மீண்டும் வரும் நேபாள மற்றும் இந்திய சகோதர சகோதரிகளை வணங்குகிறேன்.

பேரிடர் நேரத்தில் மாநில அரசுகளின் ஒத்துழைப்புக்கு நன்றி. நேபாளத்தில் இயல்பு நிலை கொண்டுவர அனைத்து தடைகளையும் கடந்து பணியாற்றி வரும் ஆயுதப்படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மருத்துவர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். பேரிடர் தொடர்பான தகவல்களை களத்தில் துணிச்சலுடன் திரட் டிய ஊடகங்களுக்கும் நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x