Last Updated : 06 Apr, 2015 01:06 PM

 

Published : 06 Apr 2015 01:06 PM
Last Updated : 06 Apr 2015 01:06 PM

ஏமனில் இருந்து மேலும் 7 தமிழர்கள் நாடு திரும்பினர்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மேலும் 7 தமிழர்கள் ஏமனில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா வந்தடைந்தனர்.

ஏமனில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த முத்துகுமார், அருண் உள்ளிட்ட 7 தமிழர்கள் மும்பை விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் வெளியுறவுத் துறை அதிகாரிகளால் ஏமன் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் ஆவர்.

ஏழு பேரும் திருச்சி, மதுரை, திருவள்ளூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x