Last Updated : 08 Mar, 2015 11:17 AM

 

Published : 08 Mar 2015 11:17 AM
Last Updated : 08 Mar 2015 11:17 AM

பெண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்: அர்விந்த் கேஜ்ரிவால் அறிவுரை

வீட்டிலும் வெளியிலும் பெண்களை மதித்து நடக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

மகளி்ர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது:

எனது வாழ்க்கையின் பின்னணியில் இரு பெண்கள் உள்ளனர். ஒருவர் எனது தாயார். மற்றொருவர் எனது மனைவி.

ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்தின்போது குடும்ப பொறுப்புகளை எனது மனைவி தனது தோளில் தாங்கிக் கொண்டார். எனது தாயார் எனக்கு பக்கபலமாக இருந்து ஆதரவு அளித்து வருகிறார்.

சமூகத்தில் பெண் என்பவர் தாயாக, மனைவியாக, மகளாக, மருமகளாக குடும்பத்தின் முன்னேற்றத்துக்காக அயராது பாடுபடுகிறார். டெல்லியில் வாழும் பெண்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். அதற்கு அனைத்து ஆண்களும், பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x