Last Updated : 28 Mar, 2015 09:47 AM

 

Published : 28 Mar 2015 09:47 AM
Last Updated : 28 Mar 2015 09:47 AM

சீனாவுடனான பேச்சுவார்த்தை சுமுகம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நம்பிக்கை

இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வரு கிறது. பிரதமர் மோடி பதவியேற்ற தற்குப் பிறகு சமீபத்தில் முதன் முறையாக சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இந்த 18வது சுற்றுப் பேச்சுவார்த் தையில் இந்தியா சார்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனா சார்பாக சீன அரசு ஆலோசகர் யங் ஜெய்ச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து அஜித் தோவல் கூறியதாவது:

இந்தியாவுக்கென்று விட்டுக் கொடுக்க முடியாத சில உரிமை கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அதை முன்வைத்துத்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மேலும், இந்தப் பேச்சுவார்த்தை தொடர வேண்டுமானால், இந்தியா வும் சரி, சீனாவும் சரி, எல்லையில் அமைதியைப் பேண வேண்டும். இந்தப் பிரச்சினையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு இந்த விதிமிக அடிப்படையானது ஆகும். இவ் வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x