நாடாளுமன்றம் வந்தார் நடிகை ரேகா

நாடாளுமன்றம் வந்தார் நடிகை ரேகா
Updated on
1 min read

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக பங்கேற்றார் நடிகையும் எம்.பி.யுமான ரேகா.

நாடாளுமன்றத்துக்கு வருகை தராததால் கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கினார் நடிகை ரேகா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று அவர் மாநிலங்களவைக்கு வந்தார். அவரது இருக்கை எண் 99-ல் அமர்ந்தார். அருகில் இருந்த சமூக ஆர்வலர் அணு ஆகா, என்.கே.கங்குலி ஆகியோரிடம் பேசினார். அவையில் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். பின்னர் கிளம்பிச் சென்றார்.

கடந்த 2012- ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், ரேகா ஆகியோர் அவைக்கு சரியாக வருவதில்லை என கடந்த ஆண்டு சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில், கயந்த ஆண்டு இரண்டு முறை நாடாளுமன்றத்துக்கு வந்த ரேகா. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் இங்கு பங்கேற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in