Last Updated : 04 Mar, 2015 03:27 PM

 

Published : 04 Mar 2015 03:27 PM
Last Updated : 04 Mar 2015 03:27 PM

நில சட்டத்துக்கு எதிர்ப்பு போராட்டத்தில் சச்சின் பைலட் உட்பட 40 பேர் காயம்

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் நில சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய தடியடியில் காங்கிரஸைச் சேர்ந்த சச்சின் பைலட் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜோதி நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், மத்திய அரசு கொண்டு வர இருக்கும் நில கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராகவும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதுக்கு எதிராகவும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

விவசாயிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சச்சின் பைலட் தலைமையேற்று நடத்தினார்.

போராட்டத்தை தடுக்க முயன்ற போலீஸார், சச்சின் பைலட் உள்ளிட்டோர் மீது லேசான தடியடித் தாக்குதல் நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x