தூக்கு கைதியின் கருணை மனுவை ஏற்றார் குடியரசுத் தலைவர்

தூக்கு கைதியின் கருணை மனுவை ஏற்றார் குடியரசுத் தலைவர்
Updated on
1 min read

தூக்கு கைதியின் கருணை மனுவை ஏற்று அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மன் பஹதூர் தீவான். இவர் கடந்த 2002-ம் ஆண்டு தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் அண்டை வீட்டார் என 4 பேரை கொலை செய்துவிட்டு போலீஸில் சரணடைந்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பஹதூர் தீவான் கருணை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பஹதூர் தீவானின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக யாகூப் மேமன், சுரீந்தர் கோலி உள்ளிட்ட 22 பேரது கருணை மனுக்களை பிரணாப் நிராகரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in