உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதி

உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மூச்சுத் திணறல் காரணமாக, முலாயம் சிங் யாதவ் நேற்றிரவு மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனை அறிக்கை வெளியானதுமே அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உறுதி செய்ய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு அவரை அறிவுறுத்தியுள்ள மருத்துவர்கள் அவரது உடல்நலன் குறித்து பயப்படத் தேவையில்லை எனக் கூறியிருக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in