Last Updated : 20 Mar, 2015 03:14 PM

 

Published : 20 Mar 2015 03:14 PM
Last Updated : 20 Mar 2015 03:14 PM

தனியார் எஃப்.எம். ரேடியோக்களில் செய்திகள்: அரசு பரிசீலனை

தனியார் எஃப்.எம். ரேடியோ சேனல்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்தி ஒளிபரப்ப அனுமதி அளிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர், "தற்போது உள்ள எஃப்.எம். ரேடியோ இரண்டாம் கட்ட சட்டத்தின்படி தனியார் எஃப்.எம்.களில் செய்தி ஒலிபரப்பினால் அதை கண்காணிக்க தனிப்பட்ட அமைப்பு இல்லாததால், தவறான செய்திகள் ஒலிபரப்பாகிவிடக் கூடாது என்பதால் தனியார் ரேடியோக்களுக்கு செய்தி ஒலிபரப்ப அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால், தனியார் எஃப்.எம். ரேடியோ சேனல்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்தி ஒளிபரப்ப அனுமதி அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது.

எஃப்.எம். ரேடியோ மூன்றாம் கட்ட சட்டத்தின் படி அனுமதி பெறும் தனியார் ரேடியோ சேனல்கள் செய்தி ஒலிபரப்ப முடியும். ஆனால், அவ்வாறாக அனுமதி பெறும் அனைத்து தனியார் எஃப்.எம்.களிலும் ஒரே மாதிரியான செய்திகளே ஒலிபரப்ப முடியும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x