Last Updated : 02 Mar, 2015 09:32 AM

 

Published : 02 Mar 2015 09:32 AM
Last Updated : 02 Mar 2015 09:32 AM

சுஷ்மா ஸ்வராஜ் 6-ம் தேதி இலங்கை பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் இலங்கைக்கு செல்ல உள்ள நிலையில், வரும் 6-ம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த நாட்டுக்குச் செல்கிறார்.

2 நாள் பயணமாக செல்லும் சுஷ்மா, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி யின் பயணம் குறித்து ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி முதல்முறையாக இலங்கைக்குச் செல்கிறார். இதற்கு முன்பு கடந்த 1987-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்றார். அதன் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.

இந்தப் பயணத்தின்போது போரி னால் பாதிக்கப்பட்ட, தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வுப் பணிகளை பார்வையிட மோடி திட்ட மிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x