Published : 07 Mar 2015 10:21 AM
Last Updated : 07 Mar 2015 10:21 AM
பன்றிக் காய்ச்சல் போன்ற பருவ கால நோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்த வருடாந்திர தடுப்பூசி முறையைப் பின்பற்றலாம் என உலக சுகாதார அமைப்பு பரிந் துரை செய்துள்ளது.
இந்தியாவில் நடப்பாண்டு இது வரை 1,200-க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி யுள்ளனர்.
இதுதொடர்பாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
வருடாந்திரமாகவும், இந்த வைரஸ்கள் பரவும் காலத்திலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள லாம். காய்ச்சலை ஏற்படுத்தும் மூன்று அல்லது நான்கு வைரஸ் களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
2014-2015ம் ஆண்டில் பன்றிக் காய்ச்சல் உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ளது. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், வட அரைக்கோளப் பகுதியில் தடுப்பூசிகள் குறைந்த அள விலேயே செயலாற்றியுள்ளன. இதற்கு, ஹெச்3என்2 வைரஸுக் கும், ஹெச்1என்1 வைரஸுக்கும் இடையே உள்ள சில மாறுபாடு கள்தான் காரணம்.
இந்தியாவில் தற்போது ஹெச்1என்1-பிடிஎம்09 வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் இதுவரை 23,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,239 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்புளூயன்சா உட்பட சுவாசம் சார்ந்த வைரஸ்கள் குளிர் காலத்தில் அதிகம் காணப்படும். இவை பெரும் அழிவுகளை ஏற் படுத்துகின்றன. பருவம்தோறும் தொற்றும் இன்புளூயன்சா வைரஸ் கள் அவ்வப்போது தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. இத னால், மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசிகளை மேம்படுத்தி, அவை திறனுடன் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT