Published : 12 Mar 2015 11:24 AM
Last Updated : 12 Mar 2015 11:24 AM

தமிழகத்தில் ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்: மாநிலங்களவையில் கனிமொழி பேச்சு

புதிய தலைமுறை சேனல் அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது, தமிழகத்தில் ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல் என மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜாவும் மாநிலங்களவை தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக கனிமொழி உள்ளிட்ட உறுப்பினர்கள் பேச முற்பட்டபோது, அவையில் முறைப்படி நோட்டீஸ் அளித்து பேசுமாறு அவை துணைத் தலைவர் குரியன் தெரிவித்துவிட்டார்.

சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில், "கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x