Last Updated : 26 Mar, 2015 10:37 AM

 

Published : 26 Mar 2015 10:37 AM
Last Updated : 26 Mar 2015 10:37 AM

தீண்டாமையை ஒழிக்க செல்ஃபி எடுங்கள்: பிரவீண் டொகாடியா யோசனை

"செல்ஃபி எடுத்துக்கொள்ளுங்கள் அதை வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பகிருங்கள், அவர்களை விருந்துக்கு அழையுங்கள், நீங்கள் அவர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்... இப்படிச் செய்தால் இந்துக்கள் மத்தியில் தீண்டாமை ஒழியும்". இவ்வாறு கூறியிருப்பவர் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் டொகாடியா.

தீண்டாமை இல்லா இந்து சமூகத்தை உருவாக்குவது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் லட்சியம் என கூறும் டொகாடியா, இந்த லட்சியத்தை அடைய 'இந்து மித்ரு பரிவார்' என்ற யோசனையை பின்பற்றுமாறு இந்துக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'இந்து மித்ரு பரிவார்' என்றால் 'இந்து குடும்ப நண்பர்கள்' என அர்த்தம் கூறியிருக்கிறார். அதாவது இந்துக்கள் ஜாதி பேதமின்றி ஒருவருக்கொருவர் குடும்ப நண்பர்களைப் போல் பழக வேண்டும். ஒரு இந்துக் குடும்பத்தின் சுக துக்க நிகழ்வுகளில் மற்ற இந்துக்கள் கலந்து கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் விருந்து பறிமாறி நட்பு பாராட்ட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இதழில் பிரவீண் டொகாடியா குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x