Published : 21 May 2014 07:35 PM
Last Updated : 21 May 2014 07:35 PM

ட்விட்டர் தேநீர் கோப்பையில் ஒரு புயல்: சஷி தரூர்

பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு மாற்றப்பட்ட விவகாரம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்குப் போய் ஒரு சர்ச்சையா? என்ற தொனியில் காங்கிரஸார் பதில் கூறிவருகின்றனர்.

ட்விட்டர் கணக்கைப் பெரிய அளவில் பயன்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சாஷி தரூர், "புதிய பிரதமர் அலுவலகத்திற்கும் அதே ட்விட்டர் கணக்கு இருக்கும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முந்தைய பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவுகள் மட்டுமே பெட்டகமாக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த அனைத்துச் சர்ச்சையுமே ட்விட்டர் தேநீர் கோப்பையில் ஒரு புயல்" என்று விஷயத்தின் தீவிரத் தன்மையை நீர்க்கச் செய்துள்ளார்.

பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கு பெட்டகமாக்கப்பட்டதையடுத்து புதிய பிரதமர் அலுவலகத்திற்கான ட்விட்டர் கணக்கில் முன்பு இருந்த 1.24 மில்லியன் வாசகர்கள் இப்போது இருக்க மாட்டார்கள், அனைத்தும் புதிதாகத் துவங்கப்படவேண்டும் என்பதே பாஜக உள்ளிட்டோரின் வாதமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x