Last Updated : 02 Mar, 2015 10:59 AM

 

Published : 02 Mar 2015 10:59 AM
Last Updated : 02 Mar 2015 10:59 AM

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் ஆஜர்: ஜாமீன் மனுவை மார்ச் 16-க்கு ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், சன் டைரக்ட் நிறுவனர் சாமி உள்ளிட்டோர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.

அதே வேளையில்,மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் மற்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ ரால்ப் மார்செல் ஆகியோர் ஆஜராகவில்லை.

16-ம் தேதி விசாரணை:

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய மாறன் சகோதர்கள், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். முன் ஜாமீன் மனு மீது சிபிஐ வரும் 16-ல் விளக்கமளிக்கிறது. இதனையடுத்து, முன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி:

இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி சம்மன் அனுப்பி இருந்தார்.

இவ் வழக்கில் சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கில் மாறன் சகோதரர்கள், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சி.சிவசங்கரனுக்கு நிர்பந்தம் அளித்து மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவன பங்குகளை விற்கச் செய்தார் என்று சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தகக்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x