Published : 17 Mar 2015 04:57 PM
Last Updated : 17 Mar 2015 04:57 PM

அவதூறு வழக்கு: கேஜ்ரிவால், சிசோடியா, யாதவ் நீதிமன்றத்தில் ஆஜர்

வழக்கறிஞர்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டி, ஆம் ஆத்மி தலைவர்கள் இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் மீது வழக்கறிஞர் தொடர்ந்த அவதூறு வழக்கில், அவர் இன்று பிற்பகல் 2 மணிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதன் படி அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா, யாதவ் ஆகியோர் ஆஜராயினர்.

சிசோடியா, கேஜ்ரிவால் நீதிமன்ற அறைக்குள் சேர்ந்து நுழைய, யாதவ் தன் வழக்கறிஞருடன் வந்தார். பிற்பாடு யாதவ் தன் இருக்கையிலிருந்து எழுந்து கேஜ்ரிவாலுடன் கைகுலுக்கினார். கேஜ்ரிவாலிடம் நலம் விசாரித்தார் யாதவ்.

அதன் பிறகு மூவர் இடையேயும் எந்த வித உரையாடலும் நடைபெறவில்லை. அவ்வப்போது கேஜ்ரிவால் காதில் சிசோடியா கிசுகிசுக்க கேஜ்ரிவால் புன்னகைத்தபடி இருந்தார்.

இவர்கள் ஆஜரானது பதிவு செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்திலிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x