Last Updated : 20 Mar, 2015 06:34 PM

 

Published : 20 Mar 2015 06:34 PM
Last Updated : 20 Mar 2015 06:34 PM

விராட் கோலி பெரிய போட்டிகளுக்கான வீரர்: தோனி

நடப்பு உலகக்கோப்பை போட்டித் தொடரில் விராட் கோலி சரியாக ரன்குவிப்பில் ஈடுபடாதது குறித்து தோனி கவலை எதுவும் தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிராக சதம் எடுத்த பிறகு விராட் கோலி 46. 33 நாட் அவுட், 33, 44 நாட் அவுட், 38 மற்றும் 3 என்று ரன்களை எடுத்துள்ளார்.

இது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க இல்லை என்பதால் அவரது ஷாட் தேர்வுதான் அவரது ஆட்டமிழப்புக்கு காரணமா என்று தோனியிடம் கேட்ட போது, “மோசமான ஷாட் தேர்வு என்று நான் நினைக்கவில்லை. அவர் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பேட்ஸ்மென். தனது ஷாட்களை ஆடுவதே அவருக்குப் பிடித்தமானது.

அவர் மோசமாக விளையாடியதாக ஒரு போதும் கருத முடியாது என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

ஒவ்வொரு முறை அவர் களமிறங்கும் போதும் சதம் அடிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. நாம் டெஸ்ட் தொடரை தொடர்பு படுத்தி அவரது பேட்டிங்கைப் பார்க்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.

அவர் பயிற்சியில் சரியான முறையில் உள்ளார், அவர் பெரிய போட்டிகளுக்கான வீரர், பெரிய தினத்தன்று பெரிய போட்டியில் அவர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” என்றார் தோனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x