Last Updated : 10 Mar, 2015 12:12 PM

 

Published : 10 Mar 2015 12:12 PM
Last Updated : 10 Mar 2015 12:12 PM

இமாச்சல பிரதேசத்தில் பயங்கர விபத்து: 8 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி சாலையிலிருந்து உருண்டதில் திருமணத்துக்கு சென்று திரும்பிய 8 பேர் பலியாகினர்.

இந்த பயங்கர விபத்தில் மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். இமாச்சலத்தில் சம்பா மாவட்டம் பக்ரூவா நுலாவிலிருந்து திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான பேருந்தில் அதிகப்படியான எண்ணிக்கையில் மக்கள் இருந்ததாகவும், வளைவில் திரும்ப முயன்றபோது பேருந்து கவிழ்ந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x