Published : 27 Mar 2015 10:21 AM
Last Updated : 27 Mar 2015 10:21 AM

மோடியுடன் விவாதிக்க தயார்: ஹசாரே அறிவிப்பு

நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தில் உள்ள, சர்ச்சையை ஏற்படுத்தும் சில பிரிவுகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்தத் தான் தயாராக இருப்பதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர் களுடன், தான் விவாதிக்கத் தயா ராக இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தெரிவித்திருந் தார். ஆனால், 'நிதின் கட்கரியின் வாதங்கள் பலவீனமானவை. எனவே நாங்கள் பத்திரிகையாளர் கள் முன் பிரதமர் மோடியுடன் நேரடியாக விவாதிக்கத் தயாராக இருக்கிறோம். பத்திரிகையாளர்கள் முன் இந்த விவாதத்தை நடத்துவ தால், இந்த விஷயத்தில் எது உண்மை என்பதை மக்களே நேரடி யாக அறிந்துகொள்வார்கள்' என்று ஹசாரே கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x