Last Updated : 23 Mar, 2015 10:00 AM

 

Published : 23 Mar 2015 10:00 AM
Last Updated : 23 Mar 2015 10:00 AM

மத்தியப் பிரதேசத்தில் தேவாலயம் மீது தாக்குதல்

மகாராஷ்டிரத்தில் நேற்று முன்தினம் தேவாலயம் ஒன்று தாக்கப்பட்ட நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஒரு தேவாலய வளாகம் மற்றும் கத்தோலிக்க பள்ளி ஆகியவற்றின் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஜபல்பூரில் உள்ள தேவாலயத்தில் மதமாற்றம் நடப்பதாகக் கூறி, பஜ்ரங் தளம் மற்றும் தரம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த சிலரை கடந்த 20 மற்றும் 21-ம் தேதிகளில் தாக்கியுள்ளனர். பின்னர் பள்ளிக்கூடம், தேவாலய பகுதி மீது பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தரம் சேனாவின் தலைவர் மற்றும் இதர நபர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x