Last Updated : 26 Mar, 2015 09:07 AM

 

Published : 26 Mar 2015 09:07 AM
Last Updated : 26 Mar 2015 09:07 AM

கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள்: ஆம் ஆத்மி கட்சி எம்.பி. எச்சரிக்கை

மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு துரோகம் இழைத்தாலும் சிறுபிள்ளைத்தனமாக செயல்பட்டாலும் கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள் என எச்சரித்திருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில பாட்டியாலா தொகுதி எம்.பி. தரம்வீர் காந்தி.

பேஸ்புக்கில் இது தொடர்பாக அவர் கூறியுள்ளது:

கோட்பாடுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடையே சமநிலை இருந்தால் கட்சியின் எதிர்காலத்தை வகுத்திட சரியான முடிவு எடுக்க முடியும். கட்சித்தொண்டர்கள் வெறும் தொண்டர்களாக மட்டும் இருப்பதை கைவிடவேண்டும்.

ஏழை, எளியவர்கள், பல அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்து நிற்பவர்கள் என கோடிக்கணக்கானோர் ஆம் ஆத்மி மீது மட்டும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்கு துரோகம் இழைத்துவிடக்கூடாது.

இதை கட்சியின் மேல்நிலைத் தலைவர்களும் கீழ்நிலைத் தலைவர்களும் உணர வேண்டும். சிறு பிரச்சினைகளை பெரிதுபடுத்துவது சரியானது அல்ல. கோட்பாடு படி செயல்படுகிறோமா என்பதுதான் இப்போதைய கேள்வி. இதில் தெளிவு ஏற்பட்டால் ஆம் ஆத்மி எதிர்காலத்தையும் நாட்டு மக்களின் எதிர்காலத்தையும் முடிவுசெய்யலாம்.

கட்சியின் எதிர்காலம் தொண்டர்கள் கையில் உள்ளது. தொண்டர்கள் வெறும் தொண்டர்களாக மட்டும் இருந்தால் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, போன்றவை போல ஆம் ஆத்மியும் மாறிவிடும் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x