Last Updated : 05 Mar, 2015 03:47 PM

 

Published : 05 Mar 2015 03:47 PM
Last Updated : 05 Mar 2015 03:47 PM

ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 9 பேர் பலி

ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 9 பேர் பலியாகினர். ஜெய்ப்பூரில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா எங்கும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் 4 ஆம் தேதி வரை 5,822 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் மட்டும் 295 பேர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 55 பேர் ஏற்கெனவே பலியான நிலையில் நேற்று (புதன்கிழமை) மாலை நிலவரப்படி 9 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் அந்த மாநிலத்தில் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை அதன் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x