Published : 16 Mar 2015 05:51 PM
Last Updated : 16 Mar 2015 05:51 PM
இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை சுடுவோம் என்று அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
அண்மையில் தந்தி டி.வி.க்கு அவர் அளித்த பேட்டியில் இதே கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு இந்திய அரசு, மீனவர்கள் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் இரண்டு நாள்கள் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்தார். மோடியின் பயணம் குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் வெற்றிகரமாக அமைந்தது. இலங்கை மக்கள் மனதை மோடி வெகுவாகக் கவர்ந் துள்ளார். மிக நீண்ட காலமாக நீடிக் கும் இந்திய, இலங்கை மீனவர் கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இரு நாடுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின் றனர்.
அதேநேரம் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக் கிச்சூடு நடத்தும் அதிகாரம் இலங்கை கடற்படையினருக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT