Published : 06 Mar 2015 10:10 AM
Last Updated : 06 Mar 2015 10:10 AM

‘கேக்’கில் கைப்பேசி சிறை அதிகாரிகள் பறிமுதல்

மேகாலயா மாநிலம் மேற்கு காரோ மலை மாவட்டத்தில் உள்ள சிறையில், அங்கே சிறை வைக்கப் பட்டிருக்கும் ஒரு தீவிரவாதிக்கு கேக்கின் கீழே கைப்பேசியை வைத்து அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சிறை அதிகாரிகள் அந்தக் கைப்பேசியைப் பறிமுதல் செய்தனர்.

அந்தச் சிறைக்கு நேற்று தெங்சராங் மரக் எனும் பார்வை யாளர் ஒருவர் வந்தார். அவரிடம் உணவுப் பொருட்கள் இருந்தன. அவற்றை அங்கே சிறை வைக்கப்பட்டிருக்கும் பன்சங் எம்.மரக் என்பவருக்கு வழங்க தான் வந்திருப்பதாகக் கூறினார்.

அந்தப் பார்வையாளர் கொண்டு வந்த உணவுப் பொருளை பரிசோதித்தனர். அப்போது கேக்கின் கீழே கைப்பேசி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்தக் கைப்பேசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்தக் கைப்பேசியை, சிறை உள்ளே இருக்கும் விசாரணைக் கைதியான வில்லியம் சங்மா எனும் தீவிரவாதிக்காகக் கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x