Last Updated : 22 Mar, 2015 12:31 PM

 

Published : 22 Mar 2015 12:31 PM
Last Updated : 22 Mar 2015 12:31 PM

பனிச்சரிவில் சிக்கி காஷ்மீரில் 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று பனிச்சரிவு ஏற்பட்டதில் 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 3 பேர் பலியாயினர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ராம்பன் மாவட்டம் பனிஹல் வட்டம் மாஹூ பகுதியில் நேற்று காலையில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினரும் உள்ளூர் பகுதி மக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பஜ்னாரி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனின் சடலத்தை மீட்டனர். மேலும் 2 பெண்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட போதிலும், சில மணி நேரங்களில் அவர்கள் உயிரிழந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறும்போது, “பனிச்சரி விலிருந்து உயிருடன் மீட்கப் பட்ட 2 பெண்களையும் மாவட்ட மருத்துவமனைக்கு ஹெலி காப்டர் மூலம் எடுத்துச் செல்லு மாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டோம். ஆனால் அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்யாத தால் 3 மணி நேரத்தில் அவர்கள் இறந்துவிட்டனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x