Last Updated : 17 Feb, 2015 11:10 AM

 

Published : 17 Feb 2015 11:10 AM
Last Updated : 17 Feb 2015 11:10 AM

மத்தியப் பிரதேசத்தில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி; 29 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர், 29 பேர் காயமடைந்தனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் தர் மாவட்டத்தில் மச்சாலியா கட் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

இது குறித்து தர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. கூறும்போது, "விபத்துக்குள்ளான பேருந்து மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து ராஜஸ்தான் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இரவு 10 மணியளவில் பேருந்து மச்சாலியா கட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி 300 அடி பள்ளத்துக்குள் விழுந்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது, தர், ஜபுவா மாவட்டங்களில் இருந்து மீட்புக் குழுக்கள் விரைந்தன. 50 போலீஸ்காரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ராட்சத கிரேன்கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்டன. மூன்று பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர். 29 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் இந்தூர், ஜப்பார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

முதல்வர் இரங்கல்:

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடும். காயமடைந்தவர்கள் தலா ரூ.50,000-மும் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x