Published : 25 Feb 2015 09:34 AM
Last Updated : 25 Feb 2015 09:34 AM

ஜனவரி 1 முதல் பிப்ரவரி 22 வரை பன்றிக் காய்ச்சலுக்கு 841 பேர் பலி

சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா: நாட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 841 பேர் பலியாகியுள்ளனர்.

ஜனவரி 1 முதல் பிப்ரவரி 22-ம் தேதி வரை இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் மொத்தம் 14 ஆயிரத்து 673 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோய்த் தடுப்புக்கான மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுவது தவறான தகவல். அதற்கான மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x