Published : 14 Apr 2014 10:01 AM
Last Updated : 14 Apr 2014 10:01 AM

தவறான பாதையில் சென்றது யார்? - பிரியங்காவுக்கு மேனகா பதிலடி

யார் தவறான பாதையில் சென்றார்கள் என்பதை நாடு முடிவு செய்யும் என வருண் குறித்த பிரியங்கா காந்தியின் கருத்துக்கு மேனகா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

அமேதி தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத் தில் பேசிய பிரியங்கா காந்தி, “வருண் காந்தி என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவர் என் தம்பி. ஆனால், அவர் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார். குடும்பத்தில் இளையவர் ஒருவர் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தால் மூத்தவர்கள் அவருக்குச் சரியான பாதையைக் காட்டுவார்கள். நீங்கள் அனைவரும் என் தம்பிக்குச் சரியான பாதையைக் காட்ட வேண்டும் என வேண்டுகிறேன்” எனக் கூறியிருந்தார். இதற்கு மேனகா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

நாட்டுக்குச் சேவை செய்யும் பணியில், வருண் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தாரா என்பதை இந்நாடு முடிவு செய்யும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x